Friday 10 August 2012

பின்வரும் தலைமுறைகள் இணைய…




உனக்கும்'கை'  (உணவுண்ண) இருக்கையில் உழைத்திடடா! - நீ

உழைக்காமல் ஏய்த்தாயோ 'கை'இருந்தும், ஊனனடா!

உன்கை பாடுப்பட்டு உழைத்துநீ  வாழ்ந்திடவே - உனக்கு,

பிறந்ததின் மதிப்பும், பெருமைகளும் புரியுமடா!

                                      



ஊழல் 'கை' சுரண்டல் பிழைகள் செய்கையிலே - நாட்டில்,

உழைப்பவரை அஃ(து) ஏமாற்றும் வஞ்சகமே!

கா 'கை',  நேர்மை,'கை'  காக்கையிலே  உன் (பாவக்)

கறைகள் மறைந்(து) ஒர்நாள் வாழ்க்கை சிறப்புறுமடா!





பொய்யாய் யோக்கியர்என்றுப் புகழ்பரப்பி மறைந்தாலும் - பலர்

உயிர்போன்று உழைத்து காத்தவற்றை அவர்பரம்பரைகள்...

உழைப்பின் சிரமங்களை உணராமல் நாட்டுக்குள்,

மோதல்செய்(து) அழிக்கின்ற,  முன்நிகழ்வுகளை அறியாயோ?





பேதமதம்  ஊதிக் கொழுக்கும் பிறவிப்புவி  ஊனமே! - நீ

சேர்த்தவற்றைக் செப்பும்கடவுள் உனக்காக வைப்பானோ?

செத்தபின் ஓரடி நிலம்கூட உனக்கில்லையே! - ஞானம்

காண மறுபிறப்பும் கண்டவர்கள் இல்லையே! - பிறரை,

கவிழ்ப்பதும் திருட்டும்உன்  கற்பனையில்... எதற்காக?





பிறப்பைத் தலைஎழுத்(து) என்று பிழைகள்செய்தே,

பிறர்உழைப்பை கவர்ந்திடுதல் கறையன்றோ?

பிறப்புறுப்பு வழிப்பேதம் ஓதிநீ மரிப்பதும்ஏன்? - உலகம்

உள்ளளவும்உன்  சடலத்துள்உயிர்  இயங்கிடுமோ?

உழை, 'கை' உனக்கும் இருக்குதடா! - சுரண்டல்  

வினைச்செய்து பின்சாவது கேவலமடா! - வரும்

தலைமுறைகள் இணைய உழைக்க வழிகாணடா! - அதிலே

            உலகம் ஒன்றுபட்டால், அனைவருமே உயர்வாரடா!








           

 

No comments:

Post a Comment