Saturday 9 April 2016

படைத்தோன் யார்? பொய்க்கு, போலிகட்கு விளம்பரம் எதற்கு?


ஆழியுள் மூழ்கி அகிலத்தை மீட்டாயாம்;
பாலுள் முயங்கும் பரந்தாமா! ஒவ்வொரு
நாளும் உலகில் நடந்துறும் சண்டைஎவ்
வேளையும் வேண்டாமே... வா!கா!

படைத்தோர் யார்? படைப்பவர் யார்? என்றால்; 
கடமைஎன அனைவர்கும் காய்கனி தானியம் ; 
படைப்பதற்கு ஏர்உழுதும் அழுகின்ற விவசாயி!
உடல்கருகி உழைத்து மடிகின்ற தொழிலாளி! 

ஆண்டவன் உண்டேன்பதாக ஆராயாது நம்பி 
அறிவியலை நிராகரிக்கின்ற அறிவே! உன்உரு 
ஆக்கிட்டோர் இருவர்; தகப்பனும் தாயுமே!  
ஆயினும்நீ ஆராதிப்பதுஎது? கடவுள் சூன்யமே! 

அற்பமே! ஓர்நாள் உன்னுடல் உயிரை விலக்கி... 
அப்புறப் படுத்திடுவதோ காலமே; என்றறிவாய்! 
குப்புறப் படுத்துநீ வணங்கும் நம்பிக்கை விலகு! 
கற்பனை பொய்க்கு விளம்பரம் எதற்கு?