Thursday 26 June 2014

கற்பழிப்பை ஆயுதமாக, கொல்லும்...

ஒற்றுமை உயிர்கொல்லிகள் ஓதும்,
பேதவேத உயர்சாதிகள் என்னும், பேதைமை மனநோய் வெறி!

கற்றதைச் சிதைத்துப் பிழைக்கும், கடவுள்வெறி!

சுற்றத்தைப் பற்றின்றிச் சுரண்டும், சுயநல பணவெறி!

கற்பழிப்பை ஆயுதமாக, கொல்லும், கோழைகள் சாதிவெறி!

தொற்று மதநோய் கிருமிகள்,
நாடுவிட்டு வெளியேறாது...
அழியாது என்றும் வேற்றுமைவெறி!


Read more [Click > URL]:
http://willsinunityworld.blogspot.in/2014/06/1.html?m=1

Saturday 7 June 2014

உன்வாய்... வன்கொடுமைக்(கு) அரிசி  போடு!

Read ndtv news [Click > URL]: 
http://m.ndtv.com/article/india/you-do-your-work-i-will-do-mine-mulayam-singh-yadav-on-rape-cases-in-uttar-pradesh-535908

என்ன பதில்இது?  

இப்படிச் சொன்னஉன்வாய்...
வன்கொடு  மைக்(கு)அரிசி  போடு!

எட்டே கால் இலட்சணமே!

எமன்ஏறும் பரியே!  - முட்டமேற்
கூரையில்லா வீடே!
கொலைசெய்யும் குரங்கே!
ஊரைவிட்டு  ஓடுஇல்(லை);
சிறையே!

[Comments on Badaun UP gang

rape - reply]

Read more [Click > URL]:

http://willswordstamil.blogspot.com/2014/06/blog-post.html


கோயில்கள்  மானுட...  களைகள் மு ட்புதர் என்றால்,

குற்றங்கள் புரிபவன் மகிழ்வானே!

தப்புக்கள் செய்கின்றவன்  எப்போதும் சிரிக்கின்றான்  என்றால்; தெய்வங்கள்... உண்டென்பதில்,

உண்மை இல்லையே!

பாலுக்குப்   பூனைகளை,

காவலுக்கு வைத்தால்...
பாற் குடங்கள் உடைவதில், வியப்பில்லையே!

ஊருக்குள் சாதிவெறி  ஓநாய்கள்,

புகுந்ததில் முட்புதர்களுக்குள்;
சின்னஞ்  சிறு பயிர்களும்...
நாசம் ஆயிற்றே!

சிறுமியர் கற்ப்பை சிதைத்துக் கொன்றோரை...

சாதிவெறிப் பன்றிகள், சாடவில்லையே - அந்த
காமவெறி மிருகங்கள்,
உடன் சாகவில்லை என்றால்...

துர்கை அம்மனும் பொய்தானே! மகளே!

மாரி அம்மனுக்கு நீ செய்திட்ட,
தவ பூசைகள் எதுவும்...
உன்னை உன் கற்பை,
காக்க வில்லையே!

அதனால் துர்க்கை அம்மனே!

நீதான் ஆவாயே! 
உன்னை கெடுத்த சாதிகளை அழிப்பாயே!

தம்கற்பைப் பறிகொடுத்து 

உயிர்விட்ட - உன்  
சகோதரிகள்மேல் சத்தியம், செய்வாயே!

மேலும் படி  [Click >URL]:



http://willswordstamil.blogspot.com/2014/06/blog-post_6.html