Wednesday 25 July 2012

உலக அளவில் ஆங்கிலம், மாநிலத்தில் தாய்மொழி ...


Thanks: Dinakaran, the Tamil E-Mail News Paper for publishing the verses on the date as shown below:
Wills in Kavithai Chittu
Chennai
7/22/2012 5:31:28
இந்திய தேசத்துக்கு, இரண்டு மொழிகள் போதுமே!

தமிழ்பழத்தைத்தனதாக்கி*தடிக்கிழவிமனங்குளிர,
அமிழ்தமெனத்தந்ததும்நீஅன்னியரைவென்றதும்;
தமிழ்நிலம்போல்மெய்யென்றால்சங்கத்தமிழ்முருகா! (எம்),
*உமிழ்தளத்தில்இந்திவந்(து) ஒண்டலாமோ? நிறுத்து!

இந்தியா? ஒன்றுபட்ட இந்திய தேசமா?
என்றிங்கோர்அய்யம்எழவோ? மொழித்திணிப்பு
தந்திரம்என்றாகும்தயங்காதே, மய்யமே!
இந்தித் திணிப்பை எடு.

இழிவின் துவக்க(ம்)எது இந்தித் திணிப்பே!
பழியைச் சுமக்காதே பாரதத்துள் வேற்றுமை!
ஒழிய வழிகாண் உடன்நிறுத்துபேதவெறி
நுழைக்க *நுணலாய் ஆகும்!

இந்திப் படித்தாலே எல்லோர்கும்வேலையுண்டென்(று)
அந்தகா ரத்துள் அமிழ்த்திடாதேதப்பிதமாய்;
சந்தர்ப்ப பேதமே! சாற்று வடவரிலும்
இந்திகற்றும்பட்டினிதான்ஏன்?

இந்திநு ழைந்திட்டால்இல்லைத்தமிழன்னை!
நம்புந வோதைய நஞ்சைநீ ஏற்றாயோ,
பின்னாள் தலைமுறை பெற்ற சுதந்திரத்தை
எங்கென்று கேட்பான் இழந்து!

அன்னை மொழியழிக்கும்அப்புறமாய்நீஅழிய
உன்னை அடிமைகொளும்ஒண்டவிடாதேயிது,
திண்ணைக் கதையல்ல; திக்கெட்டும்ஓங்கட்டும்...
இந்தித் திணிப்பின் எதிர்ப்பு!

அன்னியன்ஆ திக்கம் அண்ட வழியிரண்டுண்(டு)
எண்ணுக ஒன்றுமதம் இன்னொன்றுன்தாய்மொழியை
கொன்றிடும்பேதநஞ்சு; கொய்கஉடன்அவ்விரண்டும்,
என்றும் உலகுக்(கு) எதிரி.


*தடிக்கிழவி - அவ்வை மூதாட்டி
  உமிழ்தளம் - நாக்கு
  நுணல் - தவளை.
  Labele : Thanks: Dinakaran the Tamil E-Mail News Paper
   (Click Lable)

  Verse’s title :எதுவோ ஆதாரம்? தமிழே!
          

Friday 20 July 2012

ஒருவரின் காலம்கடந்த கனவு காதல் புலம்பல்...


 New:

ஒருவரின் காலம்கடந்த கனவு காதல் புலம்பல்...

தங்கமுகத் தாமரைமேல்(வெண்) சங்கிருக்கும்; - ரோசா
இதழ்களென இமைகள் தழுவி முறுவளிக்கும்!
இணைந்து சோடிக் கருநிலவைச் சங்கமிக்கும்! - இதைக்
காணுகிற, சுவைஆப்பிள் கன்னங்கள் பரிதவிக்கும்!

இமைவருடும் விழியிரண்டும் - எப்போதும்...
எங்களுக்கே; நாங்கள் கண்களுக்கே - என்று
தொங்கும்இரு ஆண்மீசையென விற்புருவம்,
மெலிதாய் இளைத்திருக்கும் இணையாய் தவமிருக்கும்; 
விடாது வணங்கி  நோக்கும்!

விழிமீன்களுக்கு தன்னை யேத்தர  மூச்சுவிடும் - மூக்கும்
பலாச்சுளையைப் பழித்திருக்கும்! - அம்ம!
அதைத்தடுக்க இருகனிகள்... கொவ்வை இதழிருக்கும்;
மெல்லப் பிளந்திருக்கும்; வாய்உள் இருந்து
மெதுவாய் வெளியே, நாக்கும் எகிறிப்பார்க்கும்!

பருத்தியாய் இளமையில் வெடித்து மயக்கிய அவள்காதல் - இன்றும்
     பருவத்தில் பூத்தவாறு எனக்குள் மகிழ்வதாலே - அந்த
ஒருத்தியையே என்நெஞ்சுள் இருத்தி என்னை இன்றுமட்டும் (காலம்),
     உருவத்தில் முதுமையாக்கி வறுத்த முயன்றபேதும் - கனவில்
விரித்திமைகள் என்னை விழுங்குவதோ, அவளின் நினைவுகள்தான்!
     விழுங்கிடும் அவளின் விழிகள் நகைப்பதின் பிரதிபளிப்பே! - நீ
சிரித்திடும் அழகிலும் அவளின் புன்முறுவலையே காண்கின்றேன் - நான்
     திகைப்பது உன்னிடமா? அவளிடமா? தெரியவில்லை திணருகின்றேன்!

 

Thursday 19 July 2012

கண்ணற்ற ஓர் கன்னிப்பெண் புலம்பல்!



Love songs / Verses in English by Willswords M.     


                                             
கண்ணற்ற ஓர் கன்னிப்பெண் புலம்பல்!

விண்ணிலே வெண்ணிலா இல்லை;
மண்ணிலே மலர்வனம் இல்லை;
எண்ணினேன் எதனால் என்று;
கண்ணிலே கண்மணி இல்லை!

தினகரன் பகலிர(வு) இல்லை;
தினம்வளர்ந்தேன் நம்பிக்கை இல்லை;
வினவினேன் எதனால் என்று;
விழிகளுக்குள் ஒளியுணர்(வு) இல்லை.

பாதைகளில் பள்ளிகள் இல்லை;
பேதைப் பெண்பெருமை இல்லை;
பாடினேன் தெய்வமே! என்று;
பார்பதற்(கு) இறைவனும் இல்லை.

காதலன் கல்யாணம் இல்லை;
மாதுகை வளைத்தொட இல்லை;
மேதினேன் எதனால் என்று!
முறுவலிக்க வாய்ப்பே இல்லை!

விஞ்ஞானம் விழிதரும் என்றே,
வியாக்கியானம் செய்வோர் உண்டு!
கண்ணொளித்தர கடவுளும் இல்லை; (என்)
கவலைகட்கு மரணமே எல்லை!