Saturday 21 May 2016

வெற்றிலை மத்தியில்... முத்தொளிர்ந்து நாணிடுதே ஏன்?

Community cover photo

Community member photoCommunity member photoCommunity member photoCommunity member photoCommunity member photo

கனியாய் பூகனிய தழுவுகொம்பை காதலிக்கும்
கொடியே!

பனியோ பணிவாய் படிந்திடுதே புள்வெளி -
எழில்மேல்!

பிணியாய் என்னைப்பற்றி பின்தொடர்ந்திடும்
என்நிலவே!

அணிமுகிலை அகற்றிட்டதும் உன்இதழ்களுள்...
நகைப்புஏன்?


பட்டிலை நூற்கும் பருவஆலிழை பூமிமேல்
இரண்டுபட -

வெட்டிட ஒருபாதி மாம்பழம் வெட்கிடும்...
காட்சிப்போல் -

வெற்றிலை மத்தியில் வைத்திட பாக்கு...
அது கண்டுகடல் -

முத்தொளிர்ந்து நாணிடுதேஏன்! உன்புன்
முறுவல்முன்?


https://plus.google.com/u/0/communities/108436738249107089904