Wednesday 23 December 2015

பந்தத்தில் பணம் பண்ணும் சாதிக்குள்...

Embedded image permalink 


Photo:  35m



உன் சுவாசத்தோடு நீந்திட்ட தால்காதல்
காற்றுள் கரைந்துற்ற​​தோ?
உருகுகின்றேன் ன் வசம்;
தேடிட்டேன் என்உயிர் சகவாசம்! உன்றன்-
இதயத்தில் செய்கின்றது வாசம்!

காற்றுள்ளே நேற்றுநீ செய்திட்ட சுவாசம்;
காலமெல்லாம் இதயத்துள் பேசும்!
உன் இதழ்கள்வழி அனுப்பிட்ட தூது...
என்உச்சந் தலைக்குள் நுழைந்து-
இன்று மூளைக்கு தருகின்றது வேது!

சொந்தத்தில் பெண்ணடிமை எங்​கே இல்லை!
பந்தத்தில் பணம் பண்ணும் சாதிக்குள்... 
அன்பு, எவரிடத்தும் காதல் ஆதாரத்தில் இல்லை!
உன்னைநான் பார்த்திட்ட நாள் முதலாய் - என்
மண்டைக்குள் மூளை கட்டுப்பாட்டில்இல்லை!

Wednesday 11 November 2015

உன்னால் எனக்கு காத​லே... வாழ்கை ஆயிற்று!

 
   Photo:   Kevin Howard


உ ன் னா ல் தா ன்  மா றி னே ன்
உ ற வா க  ஆ கி னே ன்!

உன்னிலிருந்து
       காதல் விதைப்பெற்றேன்!
உன்னிலிருந்து
       கற்பனைக் கொடிவளர்த்தேன்!
உன்னிலிருந்து கவிதை -
       மகரந்தங்களை தூவிவிட்​டேன்!
உன்னிலிருந்து கனிகள்மணங்களை
       காற்றில் உதிர்த்திட்டேன்!

என்னால் நான்உன்
       துணையை விலகிட்டேன்!
என்னால்நான் குடும்பத்தைத்
       தொலைத்துவிட்டேன்!
என்னால் என்றன் -
       உறக்கம் மறித்திட்டது
என்றன்உயிரை
       நம்காதல் காப்பாற்று கின்றது!

உன்னால் என்றன்
       சிந்தனை முளைவிட்டது!
உன்னால் என்றன்
       கற்பனைகள் விரிந்திட்டன!
உன்னால் என்னுள்
       காவிய கவிதைகள் மணக்கின்றன!
உன்னால் எனக்கு
       காத​லே வாழ்கை ஆயிற்று!

Monday 2 November 2015

டாஸ்மாக்குக்கு எதிராக பாடல்!

 
    தகவலும் பு​கைப்படமும்:    Prakash JP


நாறிடும் கூவம் ஆறுஉன் -
       நாக்குவிரும்பிடும் மதுச்சாறு!

போரிடும் அறிவுப் புலன்களும்,
       உடலும்கெட... மதிமயக்கி;

தேரேறும்! ​மதநோய் பரப்பும்
       சாதிகிருமிகள் ​தெரு​தெரு புழுக்க...

சோருதல் அளித்து, படிப்பவனை...
        பள்ளிவிலக தூண்டும்!


சேறினுள் சிக்கிட்ட விளங்கா படகு;  

        மதுவிற்கும் அரசு!  போதை...

தூறுகளுள் ஆதாயம் நாட... ஆக, 
        துயருறும் மக்களை;

சாராய இனஆளுகையி லிருந்து   
        மீட்க பாடிட்டது  தவறோ?

மீறினராமே  சட்டம்!  கோவனும்...
        சிறையுள் எதற்கு?







 


Wednesday 23 September 2015

ஏட்டுக்குள்ளே கிறுக்கும் சின்னப்பையன், தோட்டத்திலே...

  
   ஓவியம்:  Debra Simpson


தினமும் உன்னை நினைத்து  துருவ...
மலைப்பனி ஆகினேன்!
 
என்னைநீ பார்க்க முற்பட்டால் உருகி...
நதியாகிடுவேன்!
 
என்னோடு பழகும் நிலைமை உருவானால்...
கூடு துறை யாகிடுவோம்!
 
என்னை மீண்டும் பிரிய முடிவெடுத்தால்...
அதில் ஆவியாகி மேலே போவேன்!
 
இணைய நினைத்து மணந்தால்... உன்னை,
மழையாக்கி பூமிமேல் குதிக்க செய்வேன்!


காட்டுக்குள்ளே காணும் மேடு மேலே...
பாட்டு வரவில்லை பாடு மூங்கில் கிளியே!
சேற்றுக்குள்ளே சிணுங்கும் வயல்தான்அன்ன....
ஆற்றுக்குள்ளே ஆசையை வைத்தேன்;
கடியேன் என்றன் அழகுக் கயலே!

ஏட்டுக்குள்ளே [ஏதோ] கிறுக்கும் சின்னப்பையன்...
தோட்டத்திலே, துள்ளும் மானே அன்ன...
விளையாடும் என்றன் சீட்டுக்குள்ளே;
கேட்டிட்டஉன் அழகிய காதல் ராணியை...
காட்டிடேனே ராசா நீ போடணுமே ஏசா!
 

Friday 31 July 2015

யாதும் எம்ஊரே! யாவரும் கேளிர்என ஓதுசு ரண்டல் ஒழியும்!


   ஓவியம் :    Maalaimalar Tamil மாலைமலர் தமிழ்

சாதிஎனும் சொல்லுக்கு சாற்றுகபொருள் யாதாம்?
இறைவன், கடவுள், ஆண்டவன், தெய்வம்!
இவையாவும் அர்த்தங்களாம்! இப்போது செப்பு;

சாதி என்றால் இறைவன்; சாதிச் செயல்...
கடவுள் செயல்; சாதித் தலையெழுத்து என்றால்,
சாதியால்(இறைவனால்) ஆனதலை யெழுத்து!

இன்னும் சாதிவிதி, தெய்வ விதி, என்றும்;
முன்னிருந்த சாதிதொடர்புச் சொற்கள்...
உருமாற்றம்உற, இறைவன் கடவுள்என ஆகினவே!

சாதிஓர் கற்பனைசொல்! சாதிசிந்துநதி,சாதிசந்துநதி,
சாதிசந்நதிகள்; ஆகிஅதுவே தெய்வசந்நதி, ஆயிற்று!
சாதிசந்நதி, சாதி சந்ததி என்றாயிற்று!

சாதிசந்ததி அன்ன,  தெய்வசந்நதி... தெய்வசந்ததி,
ஆகிஅந்தஇனன் இன்று அந்தணன் என்றாகினானே!

யாதும் எம்ஊரே! யாவரும் கேளிர்என
ஓதுசு ரண்டல் ஒழியும்!

இரவும் பகலும் இணைதலுக்கு...
ஒருநாள் என்பது அடையாளம்!

ஆணும் பெண்ணும்சமமே என்பது,                                                         
அறிவுள்ள மானுட குணத்துக்கு அடையாளம்!

மானுடத்தை குலைக்கும் கறைகட்கு...
வேற்றுமைச் சொற்கள் அடையாளம்!

வேற்றுமை ஆதிக்கம் ஊழல் செய்வோர்கு,
சுயநலமத அடிமைகள் அடையாளம்!

மானுடத்துக்கு உறவொழுக்க... அடையாளம்?
கற்புப்போற்றும் ஆண்பெண் குறிகள் ஆதாரம்!

நல்ல நாடு என்னும் உயர்வுக்கு எதுஅடையாளம்?

ஒற்றுமை நேசிக்கும் தேசப்பற்றே... என்அறிவே!

Thursday 26 March 2015

இயற்கை பெண் தன்னைப் பாடென ஊடுறுவி நோக்க...


  Photos:  sanjay shinde




இயற்கைப் பெண் தன்னைப் பாடென
ஊடுறுவி நோக்க...

முதல்நாள் உன்னைநான் பார்க்க
உன்கூந்தல்...
இரவை இருட்டாக்கிட்டது!
அடர்ந்த ஓர்முகிலாகி,
நிலவை மறைத்திட்டது!

இரண்டாம்நாள் முகிலாய்,
மாறிட்ட உன்கூந்தல்...
இருமலை முகடுகளை வருட,
அந்த உரசல் கண்டு தடுமாறி;
ஓர் அருவி தாவிக்குதித்து... நகர்ந்திட்டது!!

மூன்றாம் நாள் பார்த்ததுமே...
உடன் உன்பார்வை,
பகலைத் தோற்றுவித்தது!
காதல் குயில் கவிதைப் பாடிட்டது!

நான்காம்நாள் எழிற் கூந்தல்...
தென்றல்பட்டு,
சற்றேஅகல...
உன்எழில் மலைகள் பார்என்றே,
நிமிர்ந்து விண்ணை நோக்கிட்டன!

ஐந்தாம்நாள் பகலில்...
மலைகள் அடி வாரத்தில்,
ஓர்விரிவுற்ற...
கொளுந்து வாழைஇலை அழகில்,
சமவெளி...
அற்புதமாய் காட்சித் தந்திட்டது!


 
ஆறாம்நாள் என்பார்வையில்,
மது அருந்திட்ட குதிரைஅன்ன;
அடங்கா ஓர்நதியின் எழில்,
கூடுதுறை சிரிக்க...
என்கண்கள் தொட்டன!

ஏழாம்நாள் அரைமறைவு...
முகில் பிறையாய்;
இமை மூடிட்ட;
எழில் நிலவைக் காண,
உன்விழகளை என்விழிகள்...
அழகு இதுவே எனமுயங்கிட்டன!

இயற்கை எனக்காக உரு ஆயிற்று!
நானோ...
நண்பா!  உன் காதலுக்காக...
கரு ஆகினேன்!