Saturday 30 June 2012

Tamil Manam படவரிசை Comments (Verses)

View Tamil Manam (Web site) And the comments on images:
Click:
kireedomthemovie.blogspot.com/2007/02/kireedom-in-pics.htmlCached

19 பிப்ரவரி2007 – 1) Wills in Kavithai Chittu
with comments > WillsIndiasWillswords
15 ஜூன் 2012 ...1) Wills in Kavithai Chittu http://willsindiaswillswords.blogspot.in 2) Willswords
Tamil Twinkles http://willsindiastamil.blogspot.com 3) Willswords ...

http://www.kodangi.com/2012/07/the-evolution-of-god-by-rober...
2 நாட்களுக்கு முன்னர் ... 1) Wills in Kavithai Chittu http://willsindiaswillswords.blogspot.in
2) Willswords Tamil Twinkles http://willsindiastamil.blogspot.com 3) Willswords ...
[ஏதென்சு நகரத்து எழில் மிகு வாலிபன்]

WillsIndiasWillswords"இந்து இளைஞருக்கு
அறிவுரை இயம்ப வந்தனர்பெரியோர் இவ..." என்ற
இடுகையில்புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்.
ஒரு ஞானியின் கனவு அரசாட்சியில்!
You +1'd this publicly. Undo

 

Thursday 28 June 2012

கரும்பாய் ஒரு கனவு...ஆனால், கனவின் முடிவு?



முகங்கவிழ் பருவம் எய்ய,
முத்தாரம் பையப் பைய,
அகமெலாம் ஆசைகள் நிறைய,
அத்தானின் மையலைக் கொய்ய...

கரம்பிடித்(து) இணையடி உன்றன்,
காட்டிலே, கற்கண்டு மழைதான் என்றார்;
இரும்பென அவர்பிடித் தோன்றும்,
இருந்தாலும்... தோழியர் தயங்கிட,

இரும்பென அவர்ப்பிடி ஆயினும்,
இனித்திடும் கரும்பும் என்றே
அரும்பென இவள்சிலு சிலுத்தாள்;
அனுபவி என்றே தோழியர்...

இளநகையொடு மெதுவாய்த் தள்ளிட,
இவள்நாணிக் கதவைத் தாளிட...
"எழுந்திடடி விடிந்திட்ட(து)" என்றே,
எழுப்பிட்ட அம்மா சொன்னார்...

வந்திட்டது தெருவில் தண்ணீரும்!
வா,நட நீர்ப்பிடி லாரியில் என்றார்;
கண்டிட்ட கனவு...உடன் மறந்திட,
கன்னியிவள் குடமெடுத்(து) ஓடினாள்!

Web site names/

Web site addresses
1)Wills in Kavithai Chittu

2)  Willswords English Twinkles     http://willswordsindiatwinkles.blogspot.in


Monday 25 June 2012

செடிகொடிகளில் காய்கறி வகைகள் காய்ப்பதின் காரணம்!


          சமைத்துண்ணும் அவரை, துவரை முதலான காய் கறிகளில் பெரும்பாலானவை செடிகளிலும் கொடிகளிலும் காய்க்கின்றன. ஆனால் அப்படியே, சமைக்காது உண்ணபடும் மா, பலா போன்ற கனிவகைகள் மற்றும் உண்ணக்கூடாத சமையலுக்கு உட்படுத்தப்படாத, காய் வகையாறாக்களை (நச்சுத்தன்மை யுள்ளவை, உதாரணம்: அரளி) இவையாவும் அநேகமாக மரங்களில் தயாராகின்றன. இது எதனால்? அது இயற்கை நமக்குச் செய்கின்ற உதவிகளில் ஒன்று.

             சமையலுக்குப் பயன்படும் காய்கறிகள் அன்றாடம் அவசியமாகின்றன. அதனால், காய்கறிகளில் பெரும்பாலானவை சிரமில்லாமல் பறித்து பயன்படுத்தும் விதத்தில் செடிகளிலும் கொடிகளிலும் தயார் ஆகின்றன. தவிர, இவை பச்சையாகப் பறிக்கப்பட்டு சமைக்கப்படுவதால் சிறுவர்களின் கைப்பட்டு உயிர் மரிக்காது.

           ஆனால் பச்சையாக சமைக்கப்படும் காய்களும் (உதாரணம்: முருங்கைக்காய்) மற்றும் கனிகளும், 'ரோசாவுக்கு' முற்கள் இருப்பது போல பாதுகாப்பை உத்தேசித்தே மரங்களில் காய்க்கின்றன; மேலும் பறந்து வரும் பறவைகள் சிறுவர்களின் கல்லடிப்படாமல் உண்ணட்டுமே என்று இயற்கை யானது, சமையலுக்கு உட்படுத்தப்படாத மற்றும் நேரடியாக உண்ணப்படுகிற, காய்கனி வகையறாக்களை மரக் கிளைகளிலும் மரங்களின் உச்சாணிக் கொம்புகளிலும் தயாராகும் படிக்குச் செய்கின்றன.

     இதனிடையே சமைத்துண்ணும் முருங்கைக் காய்கள் எதனால் செடிகளில் பூப்பதில்லை மற்றும் காய்க்காது என்கின்ற இயற்கையின் ஏற்பாட்டுக்கு காரணம், அது தாம்பத்ய உறவுக்கு ஊட்டமளிப்பதாகவும் உள்ளதாகையால், வெளிநபர்களால் உரிய வர்கட்குத் தெரியாமல் பறிக்கப்படக்கூடும்; மேலும் உரியவர் களாலும் அடிக்கடிப் கொய்திடும் நிலைமையும் தவிர்க்க முடியாதபடி ஏற்படலாம். (தவிர, முருங்கைக்காய், மரங்களில் மற்றும் கிளைகளில் ஏறியும்கூட சுலபமாகப் பறிக்க முடியாது; கிளை ஒடிந்துவிடக் கூடும்).

Friday 22 June 2012

ஒரு ஞானியின் கனவு அரசாட்சியில்!



காட்சி-1

கோயில் உள்ள ஊரில்...
பொய்யுரைகள் விதைக்கப்படும்;
புராணங்கள முளைப்பிக்கப்படும்;
பேதங்கள் கிளைகள் விடும்;
மோதல்கள் செழிக்கும்;
வறுமை அரளிகளாய்ப் பூக்கும்;
பசிப் பட்டினிகள் காய்க்கும்;
மானுட அவமானச் சின்னங்களாக,
பிச்சை எடுப்போர் அதிகரிப்பர்!

அதனால்
கோயில் இல்லா ஊரில்
குடியிருக்க வேண்டும்!
இது ஞானியின்...
கனவு-அடிப்படை ஆயிற்று!
தத்துவமும் ஆயிற்று!

காட்சி-2

அங்கு...
கோயில்கள் ஏதுமில்லை!
ஆனால்,
மக்கள் குடியிருந்தார்கள்!
குருக்கள் என்று
ஒருவரும் இல்லை!
பல்லக்குகள் பாடைகள் ஆயின!
பிணமே போல்...
யாரையும் எதையும்
பல்லக்குகளில் தூக்கிச் செல்ல,
அவசியமும் இல்லை!

அதனால்
விழா ஆர்ப்பாட்டகள் இல்லை!
பொருளாதார விரையங்கள் இல்லை!
மதச் சண்டைகளை உருவாக்கிட,
ஆட்களும் இல்லை!
மனிதம் ஒற்றுமைக்காக வளர்ந்தது;
அமைதிப் பூ விரிந்தது!

 
காட்சி-3
கடவுள்கள்...
காட்டுமிராண்டிக் காலத்திய
செத்துப்போன அரசர்கள் என்பது,
அறியப்பட்டது!
பேதங்கள் சாக்கடைகளாய்
அகற்றப்பட்டன!

மக்கள் அநேகமாக,
நோய்வாய்ப் படுவதில்லை!
எந்தவொரு பிணியும்,
மருத்துவத்தாலேயே...
குணமாக்கப்பட்டது!

அதனால்
தெய்வம் என்பது
சில, தமிழ் சொற்களேபோல்,
புழக்த்தில்
இல்லாமல் போயிற்று!


காட்சி-4

ஆண்மை பெண்மை துணையின்றி,
அறிவியல் முதிர்ச்சியினால்,
மானுடத்தை மட்டுமல்ல...
எந்தவோர் உயிரையும்
செயற்கையாகவும் உருவாக்க முடிகின்றது!


ஆனால்
மனித நேயம் நோக்கில்,
அவ்விஞ்ஞான ஆய்வு
விளைவுகளை,
மருத்துவ ஆவணங்களில்,
மந்தனமாக (இரகசியமாக),
மற்றும் -
ஆராய்ச்சிப் பெட்டகங்களில்
கரு... பாதுகாப்பாக
வைக்கப்படுகின்றது.



            
                                           Page-2
எதற்காம் ...
இனியும் ஒருமுறை
உலகம், நீரால் மூழ்கடிக்கப்படும்பட்சத்தில்...
கூர்ம(பன்றி) அவதாரங்கள் போன்று,
புராணங்களை நம்பியிராமல்...

அவறிவியல் அடிப்படையில்...
அகிலம் முன்னம், சூரியனிடமிருந்துப்
பிய்ந்த காலத்தில்  
நிகழ்ந்தார்போல்...
மானுடமாக,
உயிர்ப்பிக்கப்படும் பொருட்டு...!
மேற்குறிப்பிட்ட,
கரு... பாதுகாப்பு...
அன்றாட நிகழ்வு ஆயிற்று 

காட்சி-5

அதோ நமது சூரியன்
எரிந்து கருகிக் சிறுகிச் சிதறி...
தூசி மணடலம்,
ஞாலத்தை மூடுகின்றது!


இதோ... மனிதனால் உருவாக்கப்பட்ட
ஓர் செயற்கைச் சூரிய வளாகம்...
பனி மழைத் துகல்களொடு,
குளிர்ந்துச் சுழல்கின்றது!

காட்சி-6

அட... இன்று மானுடம்வாழ்வது...
(கனவு காணும் நம் ஞானி உட்பட),
எரிமலைகளாய் சிதறிட்ட,
பூமியின் பழைய
தூசிப்
படலங்களைக் கொண்டு,
மனிதன் படைத்திட்ட
அவனுடைய
செயற்கை நிலவில்!

காட்சி-7

அய்யகோ...! இஃது என்ன?
ஆழமாய் நில அதிர்வு,
மீண்டும் ஓர் சுநாமி...
சப்பானில்,
மறுபடியும் துவங்கி...
அணுஉலைகள் ஆங்காங்கே கசிந்து...

உலமெங்கிலும்
மக்களின் மரண ஓலம்!
ஞானியின்அற்புதக் கனவு...
மானுட ஒற்றுமையே போல்
கலைந்தது!

கடவுள் இல்லவே இல்லை...
நிரூபனமாயிற்று!