கணையால் (அம்பு) விழுந்த கனி! (கணை எண் 2)
கேள்வி: மனிதன் மரித்ததும் உயிர் எங்கே செல்கின்றது?
பதில் : வித்தி லாத சம்ப்ர தாயம் மேலு மில்லை கீழுமில்லை;
தச்சி லாது மாளிகை சமைந்த வாற தெங்கனே?
பெற்ற தாயை விற்றடிமை கொள்ளு கின்ற பேதைகாள்!
சித்தி லாத போது சீவ னில்லை யில்லை யில்லையே!
-- இவ்வாறு அறிவியல் அடிப்படையில் நமது முந்தையப் பாட்டனார் சிவ வாக்கியர் தமது ஞானத்தால் ஏற்கெனவே பறைந்துள்ளார் (ஓதி இருக்கின்றார்).
சித்து என்றால் உடல்; சீவன் என்றால் உயிர். என்வரையில் உயிர் என்றால் இயக்கம் மற்றும் இயங்கல்; மனிதனது சித்து அதாவது உடல் மரித்ததும் (உடலம் தனது செயற்படும் ஆற்றலை ஏதாவது காரணத்தால் இழக்கின்ற போது) உயிர் அதாவது இயக்கம் அல்லது இயங்கல் நின்றுவிடுகின்றது. மனிதனில் உயிர் அதாவது இயக்கம் பழுதடைந்தாலும் அல்லது நின்றுவிட்டாலும் அதனாலும், மனிதன் உடன்நிகழ்வாக மரித்துவிடுகின்றான்;
எனவே உயிர் என்று எதுவும் தனியாக உருவமாகவோ உறுப்பாகவோ இல்லை; மனிதன் மரித்ததும் அது புனைகதைகளாகச் சொல்லப்படுகின்ற சொர்கத்துக்கோ நரகத்திற்கோ பயணமாவதும் இல்லை.
முடிவுரை: வைக்கப்படுவதற்குப் பெயர் - 'வைப்பு'; வார்க்கப் படுவதற்குப்
பெயர் -
'வார்ப்பு'; பூக்கப்படுவதற்குப் பெயர் - 'பூப்பு; அவ்வாறே,
இயங்குதலுக்கு அல்லது செயற் படுதலுக்குப் பெயர் - இயக்கம்
மற்றும் இயங்கல் அதாவது இயங்குதல்.
|
Monday, 18 June 2012
மனிதன் மரித்ததும் உயிர் எங்கே செல்கின்றது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment