வெள்ளிஅணி பெண்ணே!சிரிக்கும் விழியிமை தெளிக்கும் தமிழால்,
திங்கள் வரக்கண்டு செவ்வாயைக் கேட்டேன்!தந்தநிறப் பல்விரிய, தங்கநிறப் 'பூ',தன்மங்கைவர உடன்பட, வியாழனிடம் போஎன்றாள்!தங்கமாய் அதுவிண்ணில்;தருகின்றேன், வெள்ளிஅணி என்றான்;நங்கை ஊடி, நாணி மனம்ஒன்றி,'ஈ'என ஒட்டாதே! இன்று'சனி' ஒவ்வாது...நாயகா! ஞாயிறு அன்று வாஎன்றாள்!தனிக் கவிதை:
தெரிக்கும் மதுவைத் திறக்கும் மலருள்,
விரிக்கும் இதழ்கள் வெடிக்கும் நெடிமேல்,
சரிக்கும் தொடர்கதைச் சரித்திரம் நீயே!
No comments:
Post a Comment