Tuesday 12 June 2012

பாவைப் பூவை பார்என வைத்தாள்...

                 
         தனிப் பாடல்:

        பாவைப் பூவை (என்னைப்) பார்என வைத்தாள்;
        பாவைப் பார்வையில் (நான்) 'பா' வை வைத்தேன்;
        பாவைப் பார்வை (என்மேல்) தைத்திட என்றன்...
   'பா' வைப் பார்த்தாள் பார்வையில் சிரித்தாள்!
        'பா' வை - பாடலை
                  

        கோழி முதலிலே! முட்டைப் பின்னரே!

பிஞ்சு விதைமு ளைத்திடா(து);
குஞ்சு முட்டை இட்டிடா(து);
அறிக முட்டைப் பொரியும்போது - உடன்
வருவ தில்லை கோழியே!
(குஞ்சுதான் வெளிப்படுகின்றது).

பெட்டைக் கோழியுள் கருத்த ரித்தபின்
முட்டை மஞ்சளும் அடுத்து வெள்ளையும்
ஒட்டித் தோன்றமேல் ஒட்டும் சவ்வுமே,
கெட்டிப்பட்டுப் பின்ஓடு ஆவதால்...
பெட்டைக் கோழி முதலிலே,  
முட்டைக் குஞ்சுப் பின்னரே!  

முட்டைக் கருத்த ரிக்கவும் முட்டைமுழுமை யாகவும்;
முட்டைக் குஞ்சுப் பொறிக்கவும்; முப்பதுநாள் ஆகுதே!
முட்டை, கோழியிட்டபின் மூன்றுபத்து நாளிலும்,
பெட்டைச் சூடு வேணுமே! குஞ்சுவெளி யேறவே!

குஞ்சு முட்டைகள் இடா(து) என்பதால்;
குஞ்சு வளர்ந்துதான், கோழி ஆவதால்!
கோழி யாகியே... முட்டை யிடுவதால்,
கோழி முதலிலே! முட்டைப் பின்னரே!

No comments:

Post a Comment