Sunday 27 May 2012

காதல் நெருங்கினால்... நெருப்பாறு!


Thanks:  Dinakaran, the Tamil  E-Mail News Paper for publishing
the verses on the date as shown below:


     காதல் ஜாக்கிரதை!
          Wills in Kavithai Chittu
                        Chennai
                        5/12/2012 11:8:29


காதல் ஒரு
தேனிறைக்கும் நிலவு!
நெருங்கினால்...
உருக்குகிற நெருப்பாறு!

காதல்...
அது, கானல் நீர்!
கண்களுக்குத் தெரியும்!
ஆனால்
தாகத்திற்கு உதவாது!

காதல்
ஒரு வர்ணஜால வானவில்!
அதற்கு...
வெளிச்சமும் வேண்டும்!
மழைத் தூவலும்...
வேண்டும்!

காதல்
இளமைக் காலத்து...
விபத்து!
அந்த விபத்தில்,
பல வாலிப உள்ளங்கள்
 தாஜ்மகாலைத்தான்...
கட்டுகின்றன!



! பூமியே!
விருப்பம் இல்லாமலா
நீ வானம் பார்த்தாய்!
மேகம்
பொழிய ஆவலுற்றபோது,
மறுப்புக் காற்றால்
மறுதளித்து விட்டாயே!

! சிறகடிக்கும் சிட்டுக்களே!
நீங்கள், கூடு கட்டுங்கள்!
அதில்
குடியேறுங்கள்!
ஆனால்...
காதல் ஜாக்கிரதை!


By - திரு .கொ.மணிமொழி,
கவிதைச் சிட்டு
இலக்கிய இதழின்- தூண்.







No comments:

Post a Comment