Friday 13 July 2012

கருத்தரித்துப் பத்துமாதம் கருவறைக்குள் வைத்திருந்து...

A Science reality:


என்னை  உன்னை எவனையும்  யாரும் படைக்க வில்லையே!
பின்னை எவன்ப டைப்பிலே பிறப்பெ டுத்தோம் மண்ணிலே,
அன்னைத் தந்தை கலவியில், அவத ரித்தோம் பெண்ணிலே!,
உண்மை இதுதான் என்பவனை உலக ஞானி என்பனே!  


உருப்படைத்து நேரடியாய் உயிர்இணைத்து ஓர்நொடியில்,
உருவம்தெரியக் கொடுத்திருந்தால் ஆண்டவனே என்றிருப்பேன்!
கருத்தரித்துப் பத்துமாதம் கருவறைக்குள் வைத்திருந்து, (நம்மை)
உருவெடுத்துப் பெற்றவர்கள், உண்மையிலே நம்அன்மையரே 


உன்னை யார்பெற்றார் என்றால் உடனேநீ அம்மா என்பாய்;
என்னை யார்பெற்றார் என்றால் என்னையும்என் அன்னை என்பேன்;
பின்னைநீ பிதற்றுவ(து) என்ன தெய்வமே படைத்த(து) என்று! - உன்
அன்னையை அவமதிக்காதே! நீஉன் அப்பனுக்குப் பிறந்தவன் தானே 


தந்தைச் சுரந்த விந்துவழி தாவிஎன்றன் உயிரணு,
அன்னை தந்த முட்டைக்கூட்டுள் ஆனந்தமாய் நுழையவே,
சொந்தமாக்கிதன் வயிற்றுள்ளேஎன் தொந்தரவைத் தாங்கியே,
தந்த(து) என்னைஎன் அன்னையே! ஆண்டவனே இல்லையே 


கூழொக்கும்உன் தந்தை விந்தில் குறுகுறு வெனவே நீந்தியஒருசில
வாலுள்ள அணுக்களில் ஒன்று (அது உன்னுடையது),
                         வந்த கருமுட்டையைத்*  துளைக்க...
வால்குறுகி கைகால் முளைக்க-நீ பிறக்கும்விதம் பக்குவமாக,
பால்சுரந்துப் பெற்றதுஉன் அன்னை! பகுத்தறிவேசொல் கடவுள் இல்லை.                     
                         ( *கருமுட்டை உன் அன்னையின் உடம்பில் உருவானது. ) 


லிங்க விந்தில் ஆணணு லிங்கம் போன வழியிலே,
தங்கி  வந்த முட்டையை (பெண்ணினுடையது) தாங்கி மெல்ல நுழையவே,
சங்க மங்க  ளானதே!  சங்க  மத்தா லானதே!
எங்கள் உங்கள் அங்கமே, யாவும் இயற்கையாய் நிகழ்ந்ததே!  


காத லால்இ சைந்த தும்காமத் தால்க லந்ததும்,
தாதடா புகுந்த தும்தா  னடாபி  றந்ததும்,
ஏத டாக  டவுளும்  எதற்க  டாப்ப  டைக்கனும்,
ஓத டாஇ  றைவென்று ஒருவனும்,  இல்லை என்றுமே!



No comments:

Post a Comment