Friday 20 July 2012

ஒருவரின் காலம்கடந்த கனவு காதல் புலம்பல்...


 New:

ஒருவரின் காலம்கடந்த கனவு காதல் புலம்பல்...

தங்கமுகத் தாமரைமேல்(வெண்) சங்கிருக்கும்; - ரோசா
இதழ்களென இமைகள் தழுவி முறுவளிக்கும்!
இணைந்து சோடிக் கருநிலவைச் சங்கமிக்கும்! - இதைக்
காணுகிற, சுவைஆப்பிள் கன்னங்கள் பரிதவிக்கும்!

இமைவருடும் விழியிரண்டும் - எப்போதும்...
எங்களுக்கே; நாங்கள் கண்களுக்கே - என்று
தொங்கும்இரு ஆண்மீசையென விற்புருவம்,
மெலிதாய் இளைத்திருக்கும் இணையாய் தவமிருக்கும்; 
விடாது வணங்கி  நோக்கும்!

விழிமீன்களுக்கு தன்னை யேத்தர  மூச்சுவிடும் - மூக்கும்
பலாச்சுளையைப் பழித்திருக்கும்! - அம்ம!
அதைத்தடுக்க இருகனிகள்... கொவ்வை இதழிருக்கும்;
மெல்லப் பிளந்திருக்கும்; வாய்உள் இருந்து
மெதுவாய் வெளியே, நாக்கும் எகிறிப்பார்க்கும்!

பருத்தியாய் இளமையில் வெடித்து மயக்கிய அவள்காதல் - இன்றும்
     பருவத்தில் பூத்தவாறு எனக்குள் மகிழ்வதாலே - அந்த
ஒருத்தியையே என்நெஞ்சுள் இருத்தி என்னை இன்றுமட்டும் (காலம்),
     உருவத்தில் முதுமையாக்கி வறுத்த முயன்றபேதும் - கனவில்
விரித்திமைகள் என்னை விழுங்குவதோ, அவளின் நினைவுகள்தான்!
     விழுங்கிடும் அவளின் விழிகள் நகைப்பதின் பிரதிபளிப்பே! - நீ
சிரித்திடும் அழகிலும் அவளின் புன்முறுவலையே காண்கின்றேன் - நான்
     திகைப்பது உன்னிடமா? அவளிடமா? தெரியவில்லை திணருகின்றேன்!

 

No comments:

Post a Comment