Sunday 30 September 2012

ஒரு கவிஞன் காதலன் ஆனால்...?


                                                                                        Page – 2. 


 
அவன்:
 
அமிழ்தசுனை அலைச்சுழல்போல் சுழல்குழியாய் நெழிந்திடுதே! - அட!
திமிர்த்தனமாய்ச் சுழன்றஎழில் சிறுநாபி எனமாறிட்டதே!
கார்முகில்கள் மயங்கியிவள் கவிதைக்குழல் ஆயிற்றே! - அந்தக் கூர்ப்பிறையும்  இவள்நெற்றியைத் தன்அசலென்றே [இக்]
                                                                                    குமரிமுகம்  நோக்கிடுமே?         
 
 சரிந்துமது தெளிக்கும்கிண்ணம் பருவம்கண்டு தழும்பிடுதே! - தென்றல் விரிந்துதழுவ காதல்மூச்சு வெளிக்கிளம்பிக் கனலாகிடுதே!  அரிந்துவைத்த மாவடுபோல் அழகுநுதல் ஈர்த்திடுதே! 
தெரிந்(து)வைத்த முத்தாரப்பல் தேன்இதழ்கள் திறந்திடுமோ?
 
 
நாணம், நழுவிடுமோ? நிலவு தழுவிடுமோ? முகிலை!
வானம், முனகிடுமோ? மழையைச் சிதறிடுமோ? புவியின்...
மேனி, சிலிர்த்திடுமோ? மெளன நதிநெகிழ - நெருங்கி
வாநீ எனகாற்று, ப்பெண் மதுஇதழை மெதுவாய் வருடிடுமோ?
 
 
To go Page - 1,
 
 
 
 
 
 
 
 
 
To go Page - 1,
(click) :
Click:                          
 
 
மேலும் கதைகட்கு             
    < சொடுக்கு >
 

No comments:

Post a Comment