Tuesday 27 May 2014

மெளன  நதி நெகிழ  மேனி சிரித்திடுமோ?


                                                             Page – 2.


அவன்:
அமிழ்தசுனை அலைச்சுழல்போல் சுழல்குழியாய் நெழிந்திடுதே! - அட!
திமிர்த்தனமாய்ச் சுழன்றஎழில் சிறுநாபி எனமாறிட்டதே!
கார்முகில்கள் மயங்கியிவள் கவிதைக்குழல் ஆயிற்றே! - அந்தக் கூர்ப்பிறையும்  இவள்நெற்றியைத் தன்அசலென்றே [இக்]
                                                குமரிமுகம்  நோக்கிடுமே? 
      
 சரிந்துமது தெளிக்கும்கிண்ணம் பருவம்கண்டு தழும்பிடுதே! - தென்றல் விரிந்துதழுவ காதல்மூச்சு வெளிக்கிளம்பிக் கனலாகிடுதே!
அரிந்துவைத்த மாவடுபோல் அழகுநுதல் ஈர்த்திடுதே!
தெரிந்(து)வைத்த முத்தாரப்பல் தேன்இதழ்கள் திறந்திடுமோ?
நாணம், நழுவிடுமோ? நிலவு தழுவிடுமோ? முகிலை!
வானம், முனகிடுமோ? மழையைச் சிதறிடுமோ? புவியின்...
மேனி, சிலிர்த்திடுமோ? மெளன நதிநெகிழ - நெருங்கி
வாநீ எனகாற்று, ப்பெண் மதுஇதழை மெதுவாய் வருடிடுமோ?
To go Page - 1,
To go Page - 1,
(click) :
Click:                            Classic - படவரிசை (தற்காலிக சேமிப்பில்)
  மேலும் கதைகட்கு               
    < சொடுக்கு >

No comments:

Post a Comment