Friday 30 May 2014

சன்னல்வழி மின்னல்கொடி...

உண்ணல் எது? தள்ளல் எது?
என்னும் சுவை அறியும்;

அன்னம் என...
காதல் தொடு [காமம் விடு]
என நாணம் தவழ;

சன்னல்வழி மின்னல்கொடி,
உன்னுள் அசைய...

கன்னம் தொட்டு...
கவிதை மெட்டு,
பண்ணுள் நிகழ... என்று தினம்

தின்னும் கனவில் உன்றன்
உறக்கம், கெடுக்கின்றேனோ?
என்னுள் வா; முயங்கு...
நானும்  மயங்கிடுவேனே!

No comments:

Post a Comment