Wednesday 28 May 2014

என் தமிழ் அன்னையே! நீ, காட்டிட்ட அன்பு...

உயிர்கள் கருத்தரித்து இயங்கிடுதற்கு,
முன்னே...
பூமி உருப்பெற்றுச் சுழன்று உருண்டிட்டது அன்ன...

பூமி உருப்பெற்றுச் சுழன்று 
உருண்டிடும் முன்னே...
வானம் விளைந்திட்டது அன்ன...

வானம் விளைந்திடும் முன்னே
பெருவெடி!
நிகழ்ந்திட்டது அன்ன...

பெருவெடி நிகழ்ந்திட்டதற்கு,
முன்னே...பிரபஞ்சம்;
விரிந்திட்டது அன்ன...

தேன் எடுக்கும் முன்னே,
கொடிச் செடிகள்...
மணந்து மலர்ந்திடுதல் அன்ன...

நான் பிறந்திடுதற்கு  முன்னே,
பிறந்திட்ட  என்...
தமிழ் அன்னையே!

நீ காட்டிட்ட அன்பு, இன்று செழித்து;
புகழ் பூக்கள் விண்ணில் பரவி...
என்னை மகிவிக்க...
உன்னை வணங்குகிறேன்..
என் தாயே!

No comments:

Post a Comment