Sunday 11 May 2014

நீ என் மீது கொண்ட அன்பு...

உன்னை மறந்துவிடு என்று,
என் வாய் புலம்புகின்றது!
ஆனால் உள்ளம் மறுக்கின்றது!

நீ இறந்துவிடு என்று எப்போதும்,
என் உள்ளம் சொல்கின்றது!
ஆனால் காதல் தடுக்கின்றது!

நீ என் மீது கொண்ட அன்பு...
என்றாவது இணைவோம்,
என்று நம்பி... என்னை,
வாழும்படி செய்கின்றது!

தினம்தினம் அழுகின்றேன்!
உன்னை எண்ணி உருகுகின்றேன்!
நான் செய்திட்ட தவறுதான்!
உன்னைப் பிரிந்திட்டதுதான்!

நீ எப்போதும் என்னையே... பார்த்திட்டாய்!
நான் கவனிக்காதது போல்,
இருந்திட்டேன்!

அப்படி அன்று விலகிட்ட,
கொழுப்புத்தான்...
இப்போது பிரிவுநெருப்பில்,
உருகுகின்றேன்!  தவிக்கின்றேன்!

No comments:

Post a Comment