Friday 25 April 2014

அ... கிழமே!  என் அகிலமே!

அ... கிழமே!
என் அகிலமே!

உனக்கு வயதே ஆகாதோ?
நானோ எனக்கு  நீ...
கிடைக்கவில்லையே என்று, ஏக்கத்தில்,
தேய்ந்து... ஒளியிழந்து;
அமாவாசைக்குள்...
மயக்கத்தில் முடங்கிட்ட  நிலவு!

இன்னுமா உன் மனம்
என்னையே நினைத்து
சுழன்று கொண்டிருக்கின்றது?

என்னை நீ கைப்பிடிக்க,
முடியாதபடி;
மதங்கள் தடுத்த போதே,
நான் இறந்துப்பட்டு...
விட்டேனே!

உன் நினைவு ஊஞ்சலில்,
என்னை நீ தாலாட்டிக்
கொண்டிருக்கின்றது;
தெரிந்தும்...

என் பெற்றோர்
வேறோருவனுக்குக்
[கெட்டியாக] கட்டிக்
கூட்டிக் கொண்டு போ
என்று என்னை
விபச்சாரி போன்று
வாழச் செய்தனரே!

அவனும் கடலாக எண்ணி,
இந்த ஏரியில்,
சுரண்டி மீன்  பிடிக்க;
ஒவ்வோர் நாளும்...
விடாமல்,
கப்பலோட்டிக்
கொண்டிருக்கின்றானே!

எனக்கு பிள்ளைகள்,
இருகின்றார்கள்;
அவர்களை,
தாய் அற்றவர்களாக்க...

என் காதல் உயிரே!
உங்கள்  மனமும்,
ஒப்புதல் அளிக்காது!
எனவே...
பூமியே அழிகின்றதாம்!

உடனே செத்துத்
தொலையுங்கள்!
இல்லை...
மூளையை உபயோகித்து
மத நம்பிக்கை அழிய
செயற்ப்படுங்கள்!

கடவுள்...
இல்லவே இல்லை;
என்பது...
மானுடம் முன்,
நிரூபனம் ஆகிடுமே!

No comments:

Post a Comment