Wednesday 9 July 2014

வேர்கடலை போல் வாய்பிளக்க...

View photo [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/stream/

பரந்தாமன் கதை அன்ன;
பாற்கடலுள்... பார்!
வேர்கடலைபோல் வாய்பிளக்க,
பாம்பு, படம் எடுக்கும்; சீண்டாதே!

பார்! சிறுவனே, நான்பூ அல்ல!
போர்க்களமாய் என்னை;
நோட்டமிட நீ  என்ன...
பாரதக்கதை அர்சுனனோ?

ஆர்ப்பரிக்கும் அல்லி என,
வில்வேல் ஆயுதமாய்...
என்னுள் உண்டு...
இமைவிழிகள்!

மோத முயன்றாயோ,
பழனிமலை அன்ன,
கேடயங்கள்... இரண்டு,
எதிர் கொள்ளும்!

திரும்பிப் பார்க்காதே போ!
பக்கம் வர, உன் தலை...
பாற் கடலுள் மூழ்கிடுமே!
 உருண்டு, என்...பாதம் தொட்டு,
உயிர் விடுமே!

No comments:

Post a Comment