Thursday 11 October 2012

கடற்கரை மணலில்... காற்றின் தழுவலில்...






எத்தனை நாளிந்த கடற்கரையில் - அன்று
இதயம் மகிழ்ந்திருப்பேன்! - என்
அத்தை மகனென வந்தே அணைத்திடும்
நித்திரை கண்டிருப்பேன்!
 
நித்தமும் வந்திங்கே தீண்டக்கனவுள் - அவன்
நிழற்படம் எடுக்கையிலே - கண்கள்
பற்றக் கரங்களில் முத்தம் பதித்ததில் - நேரம்
சென்றது மறந்திருந்தேன்!
 
கண்ணகிப் பெண்களாய் தோழியர் சூழ்ந்து
காற்றில் உறைந்ததையும் - சிலர்
உத்தமிகள் பெற்ற கோவலன்களாய் கைகள்
கோத்துத் திரிந்ததையும்...

சுட்டிப் பையன்கள் நெருங்கிச் சுண்டல்கள்
பட்டாணி விற்றதையும் - அதைப்
பெற்றுண்டு காதலர் ஆங்காங்கே சூழ்நிலை
மறந்து தவித்ததையும்...
 
இக்கடற் கரையில் கண்ணுற்றதில்லை நான்என்
சத்திய உத்தமனால் - தினம்
புத்தம் புதிய'கள்' போதைப்போல் முயங்கிட்ட
நித்திரையின் செயலால்!

புத்தன்என வந்து சொற்பொழி(வு) ஆற்றிடும்
அரசியல் காட்சிகளை - நான்
பக்தனைப் போல்சென்று பார்த்ததில்லை - அவற்றின்
பேதநிலை விளைவே!
 
அத்தை மகனென வித்தைகள் செய்திடும்
நித்திரையே வாழி! - அவர்
அன்புத் தங்கையேபோல் கண்ணுள்சிரித்திடும்
நிம்மதியே வாழி!







காதல் சிறப்புக் கவிதை > சொடுக்கு :

நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள்
சொடுக்கு :
 
அறிவியல் + காதல்
கவிதைகள்:
சொடுக்கு :
என் கவிதைப் பிரளயமே!

என் - இடதுபுறத்து இருதயமே!


அறிவியல் சாந்த கவிதைகள்:
சொடுக்கு :

countries should be united...








No comments:

Post a Comment