Friday 23 January 2015

அமிழ்தே! என்மூளையுள்நீ விளையாடாத போது...


   Photos : Taylor Swift Universe


  
செந்தமிழே! உன்னோடு உறவாடாத போது;
உயிர் வாழ்வேனோ! உன்றன்...
உமிழ்நீரை  தேனாக என்வாய் அணுகிடாத போது;
நாம் ஒன்றாவோம் எனும்நம்பிக்கை ஈடேறுமோ?


அமிழ்தே! என்மூளையுள்நீ விளையாடாத போது;
ஆறுதல் தேறுதல்என் இதயத்தை அணுகிடுமோ?


குமுதமே! என்இதழ்களும்  உனக்காக மணந்து...,
மதுச்சுரந்து விரிந்திடாத போது - என்றன்

மவுனம்தான் கலைந்திடுமோ?
என்னைநீ 

நிலவாக நேசித்துக் குவலயமாய், சுழல்வாயோ?



No comments:

Post a Comment