Saturday 11 May 2013

மற்றெதையும், சுற்றேன்என் தொண்தமிழே வாழ்த்து!


Photos: Ranjith Kuamr


வற்றாநோய் வெம்மை வறுத்தெடுக்க நக்கீரர்,
பொற்றா மரைக்குள் புகுந்தாராம் - முன்னோர்போல்,
கற்றால் நினைத்தான் கற்பேன்நான் மற்றெதையும்,
சுற்றேன்என் தொண்தமிழே வாழ்த்து!



முன்தோன்றி ஈசன்கை முத்தமிட்டு தன்பிறையைத்
தந்தாலும்; நாடளவு தங்கநகை ஈந்தாலும்;
வன்அரசு ஒன்றுசிறை வைத்தாலும் என்சிரசு,
தண்தமிழைத் தான்வணங் கும்!



சிறுவன்அச் சம்பந்தன் தீண்டி நகைக்க,
இருமுனையும் அன்னையாய்நீ ஈந்து முறுவளித்த(து)
உண்மையே என்றால் உமையவளே! கங்கையவள்...
தென்குமரி காணுமாறு செய்!





No comments:

Post a Comment