Thursday 30 October 2014

மூடாதபனி ஆற்றுக்குள் நீந்திநீ விளையாட...

 
   Photo :  Ishitha Iyer



அவன்:

ஆடாத காற்றுக்குள் புகுந்து அசைந்தேன்!

அறியாத இறைஎன்று உனக்குத் தெரிந்தேன்!

மேடான உன்படையலுக்குள்பசி மறந்தேன்!

ஈடேது இணைஇவளுக்கு என்று

உன்னோடு இணைந்தேன்!


அவள்:

நீவாட காட்டுக்குள்,

தேடாமல் தேனெடுக்க இசைந்தேன்!

சூடானஉன் கவிதைகளுக்குள்

சுகமாகச் சுழன்றேன்!

மூடாதபனி ஆற்றுக்குள்

நீந்திநீ விளையாட...

ஊடாமல் அனுமதித்தேன் எனக்குநீ...

சந்தனம் தடவ மணந்தேன்!

 

No comments:

Post a Comment