Thursday 12 February 2015

என்னைநீ ஊடுறுவிப் பார்த்ததுமே...


  Photo:  Found Pix


விரிக்கும் இதழ்களுள் வெளிப்படும்  தேனுள்;
தெரிக்கும் ஒளியில் திறக்கும் மலரில்;
சிரிக்கும்என்அழகில் தினமும் நிலவில்;
சரிக்கும் காதல் சரித்திரம் நீயே! 

என்னைநீ ஊடுறுவிப் பார்த்ததுமே;
உன்விழிகள் முழுவதுமாய் ஈர்த்திட்டன!
என்றன் நினைவுகள் ஆசை...
உணர்வுகளைக் கோர்த்திட்டன!

உன்னைப் பார்த்திட்டதுமே என் மனமோ...
கவிதை முத்துக்களாக சேகரித்து;
கற்பனை மாலை செய்து மகிழ்கின்றது!
துன்பமோ, இல்லை இன்பமோ, அன்பு?

உன்னை ஆய்வதற்கு தினம் வாடிடுது!
உன்றன்மனம் அறிவதற்குத் திண்டாடுது!
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கெனவே,
என்நிலைமை என்னைஉரு மாறிட்டது!

உன்னால் உறக்கம் என்னை கைவிட்டது!


No comments:

Post a Comment