Showing posts with label கலகம் விலகி நலம் பெற.... Show all posts
Showing posts with label கலகம் விலகி நலம் பெற.... Show all posts

Tuesday, 16 October 2012

உலகம், கலகம் விலகி நலம் பெற...


 
                                                                         Page-2

 

மரமோ எரிந்தால் கரியாகும்!
மக்கிப் புதைந்தால் உரமாகும்!
மனிதாநீ மடிந்தால், சவம்; எதுவாகும்?
மண்ணுள் அழிந்து மண்ணாகும்!


குடும்பத் தேவைக் கேற்ப  நிலபுலங்கள்
     சொத்துஉரிமைக்கும் உச்ச வரம்புகண்டு,
கொள்ளுப் பேரர்காலம் முடியும் மட்டும்
     செல்லும்வரம்பு என்று விதிகள் கொண்டு,
அனைவர்கும் கல்விவேலை  வீடுபோன்று மருத்துவ
அவசியமும், வழங்க அரசுகள் உரிய  சட்டம்கொணர,    


ஊழலும் வறுமையும் பேதங்களும் மாளும்!
ஒற்றுமை உயிர்க்கும் சுரண்டளும் சுருளும்!
தலைஎழுத்து தெய்வம் மதவகுப்பு மோதல்களும்,
தாமாக பிற்காலத்தில் நாட்டுள் கரையும்!


அறிவுநூல்கலொடு கல்வியைக் கேட்டாலும் - நீநம்பும்
ஆண்டவன் இதோஎன்று உன்முன் வராது!
அரசுப்பணிகளிலே சேர்வதற்குக் கும்பிட்டு - தேடு  
அவன்உடலம் உயிரோடு எங்கும்காட்சி தராது!
 

எல்லோர்கும் வேலை நாட்டுக்கு வலிமை - பேதம்
இல்லாமல் அடைவதுஉன் உரிமைபெருமை!
கல்விவேலைகள் அனைவருமே பெறும்படிக்கு - நேர்மை
காப்பது எப்போதும் ஆளுவோரின் கடமை!


வாழ்வதும்  பிறப்புஅன்ன  ஒருமுறைதான் - அதுபோல்
சாகும் நிலவரமும் ஒருமுறைதான்! - ஒன்றுப்பட்டு
மகிழட்டும் வாழைப்பூ சோலைகளாய்; அரசுகளே!
நிகழஅது வாழும்;  இனிதொடர்கிற தலைமுறைகள்தான்!
  
 
To go Page - 1,

                                                                                                                           
 
To go Page - 1,
(click) :
 
நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/
கவிதைகள்    சொடுக்கு :
 
 
 
 
 
 
 
 
அறிவியல் +  காதல்
கவிதைகள்:
சொடுக்கு : 
 
என் கவிதைப் பிரளயமே!
 
என் - இடதுபுறத்து இருதயமே!