ஓடமே இல்லை;
இந்த நதியும் மணல்திட்டு!
கவரவே இல்லை;
இந்தப் பூவும் சருகு!
மேகமே இல்லை;
எழில் வானமும் வீண்!
நெருக்கமே இல்லை;
அவள் பாசமும் நெரிஞ்சில்!
அரவணைப்பே இல்லை;
எந்த ஒட்டுதலும் பிசுபிசுப்பு!
தவழவே இல்லை;
தவ மழலையும் சுமை!
ஒற்றுமையே இல்லை;
மதநம்பிக்கையும் சகாரா!
மனிதமே இல்லை;
மதவிழா ஆர்ப்பாட்டமும் மனநோய்!
சமத்துவமே இல்லை;
கடவுள் நம்பிக்கையும் இடர்!
பேத ஒழிப்புக்கு இல்லை;
எந்த கட்சியும் விரயம்!
பேதமே அடிப்படை;
இட ஒதுக்கீடும் வேற்றுமை வேலி!
தனிக் கவிதை:
பண ஆசைகளின் நிகழ்வு!
பணமே, கொள்கைஎன்றுப் பாடுப்பட்டுச் சேர்க்கும்;
மனமே! மறையஉன்னைப் பின்தொடர்வ(து) என்ன?
குணமே தனமானால் குன்றிடும் துன்பம்
மனித! பணஆசை மற!
No comments:
Post a Comment